டெல்லி: அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உணவுப் பதப்படுத்தும் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்த அவர் விண்வெளித்துறையில் செயற்கைக்கோள் தயாரிப்பு, ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.