×

தொழிற்சாலையில் திடீர் வாயுக்கசிவு

திருவொற்றியூர்: பொன்னேரி நெடுஞ்சாலையில் மத்திய அரசுக்கு சொந்தமான எம்எப்எல் எனும் உர தொழிற்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த தொழிற்சாலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதால், சுற்றுப்பகுதிமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மணலி போலீசார், எம்எப்எல் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தொழிற்சாலையின் உற்பத்தி கலனில் இருந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு இந்த வாயுக்கசிவு கட்டுக்குள் வந்தது.


Tags : factory , Sudden gas, factory
× RELATED 97 பேர் பங்கேற்பு பெரம்பலூர் அருகே...