×

டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு : மதுபானம் வாங்க 7 வண்ணங்களில் குடிமகன்களுக்கு டோக்கன்!!

சென்னை : உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுபானம் வாங்க ஞாயிறு முதல் சனி வரை வண்ண டோக்கன்கள் வழங்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள், குறிப்பிட்ட நாளில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்,  டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்தது. இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் விற்பனைக்கான வழிவகைகளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது மதுக்கடைக்கு ஒவ்வொரு நாளும் வருவோருக்கு, ஒவ்வொரு கலரில் வண்ண  அட்டையை வழங்க டாஸ்மாக் நிர்வாகம் முன்வந்துள்ளது.மதுகுடிப்போருக்கு 7 நாளில் 7 வண்ண அட்டை கொடுத்து மதுவை விற்பனை செய்ய டாஸ்மாக் ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பிட்ட வண்ணம் உள்ள டோக்கனை குறிப்பிட்ட நாளில் கொண்டு வந்து மதுவை வாங்கிச் செல்லலாம். சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 கலரில் டோக்கன் தயாரித்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டுமே மதுபானம் வாங்க மதுக்கடைக்கு வர முடியும். குறிப்பிட்ட வண்ணம் உள்ள டோக்கனை குறிப்பிட்ட கிழமைகளில் கொண்டு வந்து டாஸ்மாக்கில் மது வாங்கலாம்.மேலும் சென்னை தவிர தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.


Tags : TASKMOK STORES TECHNOLOGY OPENING ,CITIZENS ,stores ,Task Force , Brewery, Sunday, Monday, 7 colors, Citizens, Token, Task, Intensity
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...