×

கொரோனாவில் இறந்த ஆந்திர டாக்டர் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 5 பேர் கைது

அம்பத்தூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் லெட்சுமி நாராயண ரெட்டி (56). டாக்டர். கடந்த மாதம் 4ம் தேதி கொரோனா தொற்று அறிகுறியுடன் அம்பத்தூர் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 13ம் தேதி இறந்தார். மருத்துவமனை நிர்வாகம் அரசு அனுமதிபெற்று அம்பத்தூர் - அயப்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான  மின்  எரிவாயு தகன மேடைக்கு கொண்டு வந்தனர். அப்போது, அவரது உடலை அந்த பகுதியில் தகனம் செய்யக்கூடாது என சிலர் போராட்டம் நடத்தினர். மேலும் அவர்களில்  சிலர் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, டாக்டர் உடலை மருத்துவமனை நிர்வாகம் திருப்பி எடுத்துச் சென்றனர். இதுகுறித்து அம்பத்தூர் மண்டல சுகாதார ஆய்வாளர் பாரதிராஜா, அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு பாடசாலை தெருவை சேர்ந்த கமல் (43), அம்பத்தூர் அன்னை சத்தியாநகர், காளிதாசன் தெருவை சேர்ந்த நாகராஜன் (26), தாஸ் (40) சந்திரசேகர் (32), அதேபகுதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (48) ஆகிய  5 பேரை நேற்று கைது செய்தனர்.


Tags : doctor ,Corona Corona ,AP ,arrest ,Dr. , Corona,Died AP Doctor, Body cremated, 5 arrested
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...