சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்தால் கொரோனாவை ஒழிக்க முடியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஜூன் மாதமும் 4 பேர் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கும். வேளாண் பணிகளுக்கு எவ்வித விதிவிலக்கும் கிடையாது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.