சென்னை: எரித்துக் கொல்லப்பட்ட மாணவி ஜெயஸ்ரீ குடும்பத்தினருக்கு தேமுதிக சார்பில் ₹ 1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட மாணவி ஜெயஸ்ரீயை, இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.