×

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடுமையான சட்டங்களால் மட்டுமே நிறுத்தப்படும் : சீமான் ஆதங்கம்

சென்னை : குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடுமையான சட்டங்களால் மட்டுமே நிறுத்தப்படும் என்பதை உணர்ந்து அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி - தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ வீட்டில் இருந்த போது, அதிமுகவினரான கலியபெருமாள்- முருகன் ஆகியோர் சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றனர். 80 சதவீதம் தீக்காயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக சீமான் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தங்கை ஜெயஸ்ரீ, குடும்ப முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கேற்கிறேன்.

பெரியவர்களுக்குள் இருக்கும் குடும்பப்பகைக்கு குழந்தையை எரித்துக் கொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாத கொடூரமான செயல். இதற்கு காரணமானவர்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடுமையான சட்டங்களால் மட்டுமே நிறுத்தப்படும் என்பதை உணர்ந்து அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!, எனத் தெரிவித்துள்ளார்.


Tags : children ,Seaman , Children, Crimes, Severe, Laws, Seaman, Adangam, Jayasree
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...