×

கொரோனா ஊரடங்கில் அதிதிராவ் களறி பயிற்சி

தமிழில் சிருங்காரம் படத்தில் அறிமுகமானவர் அதிதிராவ். அதன் பிறகு இங்கு வாய்ப்பு இல்லாமல் பாலிவுட்டுக்கு சென்ற அங்கு முன்னணி நடிகை ஆனார். காற்று வெளியிடை படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு செக்கச் சிவந்த வானம், சைக்கோ படங்களில் நடித்தார். தற்போது துக்ளக் தர்பார், ஹேய் சினாமிகா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார். ஹைதாராபாத்தில் வசித்து வரும் அவர் தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் கேரளாவின் பாரம்பரிய தற்காப்பு கலையான களரி பயிற்சி எடுத்து வருகிறார். கைகளை தலைக்கு மேல் உயரத் தூக்கிய நிலையில் உள்ளங்கைகளை காதல் பாதத்தால் தொடும் ஆரம்பகட்ட பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அவர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் கொடும்பாளூர் இளவரசி வானதியாக நடிப்பதாகவும் இதற்காவே இந்த பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags : Corona Curfew , Corona, Curfew, Adidrao
× RELATED கொரோனா காலத்தில் கடைகள்...