×

நாய்களால் கடிபட்ட நல்ல பாம்புக்கு அறுவை சிகிச்சை

கோவை: கோவை அடுத்த சீரபாளையம் பகுதியில் உள்ள வீட்டிற்குள் சுமார் 5 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று கடந்த 3 நாட்களுக்கு முன்பு புகுந்தது. அதை பார்த்த வீட்டில் இருந்த வளர்ப்பு நாய்கள் பாம்பை கடித்து குதறியது. இந்த பாம்பை மீட்டு கோவை டவுன்ஹால் பன்முக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் நல்ல பாம்பிற்கு மயக்க ஊசியை செலுத்தி அறுவைசிகிச்சை செய்தார். இது குறித்து டாக்டர் அசோகன் கூறுகையில், ‘‘பொதுவாக பாம்பு ஒரு கிலோ முதல் 1.5 கிலோ எடை இருக்கும்.

கடந்த பல நாட்களாக உணவு சாப்பிடாமல் இருந்ததால் நல்ல பாம்பின் உடல் எடை 250கிராம் தான் இருந்தது. நாய்கள் கடித்ததில் பாம்பின் வயிற்று பகுதியில் அதிகளவில் காயம் இருந்தது. அதன் 5 எலும்புகள் உடைந்து இருந்தது. மயக்க ஊசி மூலம் அறுவைசிகிச்சை செய்து சரிசெய்யப்பட்டது. தற்போது பாம்பு குணமடைந்த நிலையில், வனத்தில் விடுவிக்கப்பட்டது,’’ என்றார்.

Tags : Dogs, good snake, surgeon
× RELATED மது அருந்தியது, கஞ்சா புகைத்தது,...