×

காரைக்காலில் கடந்த 47 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாத நிலையில் கைதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

காரைக்கால்: காரைக்காலில் கடந்த 47 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாத நிலையில் கைதிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சுரக்குடியைச் சேர்ந்த ஒருவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனை முடிவில் அந்த கைதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கைதிக்கு கொரோனா உறுதியானதால் அவரை கைது செய்த காவலர்கள் 2 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.


Tags : no one ,Karaikal , Karaikal, Prisoner, Corona Damage, Last 47 Days, Confirmed
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...