×

பொள்ளாச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பேசிய இளைஞர் அடித்துக் கொலை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பேசிய இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கடந்த 7-ம் தேதி வீட்டில் இருந்த சிறுமியிடம் பேசிய இளைஞரை சிறுமியின் குடும்பத்தினர் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. சிறுமி குடும்பத்தினர் கடுமையாக தாக்கியதில் காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இளைஞர் உயிரிழந்ததை அடுத்து தாக்குதல் வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : home ,Pollachi , Pollachi, girl, youth, beatings
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு