×

வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை: ஐகோர்ட்டில் 341 வழக்குகள் முடித்துவைப்பு

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மற்றும் அனைத்து சார்பு நீதிமன்றங்களும் பணிகளை நிறுத்தின. அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்பட்டது.  இதுகுறித்து உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் குமரப்பன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊரடங்கு தொடங்கியதிலிருந்து மே 7ம் தேதி,வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மார்ச் 26 முதல் மே 7ம் தேதிவரை 732 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றில் 341 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட 215 வழக்குகளில் 105 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 12 ஆயிரத்து 109 வழக்குகளில் 10 ஆயிரத்து 206 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காலத்தில் வழக்குகள் அனைத்தும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : video conferencing ,Trial , Video conferencing, trial, court, 341 cases
× RELATED பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை