×

கொரோனா பாதிப்புடன் மதுக்கடையில் மது வாங்கிய நபர்: தென்காசியை அடுத்த சேர்ந்தமரத்தில் பரபரப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா சேர்ந்தமரத்தை சேர்ந்த ராஜேஷ் (35) என்பவர் சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர். அங்கிருந்து நான்கு லாரிகள் மாறி மாறி தப்பி சங்கரன்கோவில் வந்துள்ளார். சங்கரன்கோவிலில் இருந்து சேர்ந்தமரம் வரை நடந்தே வந்துள்ளார் மற்றும் சேர்ந்தமரத்தில் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி 07.05.2020 அன்று சேர்ந்தமரம் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு சென்றது மட்டுமின்றி அங்கு மதுபானம் வாங்கிவிட்டு மூன்று 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றியுள்ளார். பின் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

அவருடைய சகோதரர் அவரிடம் பணம் பெற்று அங்குள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கண்டரியப்பட்டு தனிமைப்படுத்த பட்டுள்ளனர். மற்றும் அவரது சகோதரர் வேலைக்குச் சென்ற இடத்தில் உடனிருந்தவர்களை கண்டறியும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் அந்த இடத்தை சேர்ந்தமரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கண்டறிந்து மற்றவர்களையும் தனிமைப்படுத்த கூறியுள்ளார். தற்போது சேர்ந்தமரம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் அடைக்கப்பட்டு சேர்ந்தமரம் கண்காணிப்பு வளையத்திற்க்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Tags : Buyer ,Corona ,Bar Corona ,bar ,The Liquor Store , Corona, Bartender, Tenkasi
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...