×

மனைவி பிரிந்ததால் மனமுடைந்த கறிக்கடைகாரர் தற்கொலை

பொன்னேரி: மீஞ்சூர் பாரதி நகரை சேர்ந்தவர் சரத்குமார் (28). கறிக்கடை வியாபாரி. இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன் தனது 2 குழந்தைகளுடன் மஞ்சுளா தாய் வீட்டுக்குச் சென்றார். இதனால் மனமுடைந்த சரத்குமார், வேலைக்குச் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவரது நண்பர் சரத்குமாரை பார்க்க வந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் சரத்குமார் தூக்கிட்டு பிணமாக தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியானார். இதுகுறித்து தகவலறிந்த மீஞ்சூர் போலீசார், சரத்குமாரின் சடலத்தை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Tags : blacksmith ,suicide , Wife. Sect, blacksmith, suicide
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...