×

கொரோனாவுக்கான எதிர் உயிரணுக்கள் லாமா என்ற விலங்கிடம் அதிகம் இருப்பதாக டெக்சாஸ் பல்லைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வாஷிங்டன் : கொரோனாவுக்கான எதிர் உயிரணுக்கள் லாமா எனப்படும் விலங்கிடம் அதிகம் இருப்பதாக டெக்சாஸ் பல்லைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.இவ்வாறான சூழ்நிலையில், கொரோனாவுக்கு ஒவ்வொருவரும் ஒரு வழிமுறையை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஒட்டகத்தின் குட்டி போல இருக்கும் லாமா விலங்கு கொரோனாவுக்கான மருந்தைக் கொண்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இது ஒட்டகத்தின் வகையைச் சேர்ந்த வளர்ப்புப் பிராணி. தென் அமெரிக்க நாடுகளில் சரக்குகளை எடுத்துச் செல்வதற்காக விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறார்கள். லாமாக்களின் உடலில் ஒருவகையான எதிர் உயிரிகள் இயற்கையாகவே இருக்கின்றன.இந்த எதிர் உயிரிகள் கொரோனா பரவுவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை என அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். எஸ் புரோட்டின் எனப்படும் நீட்சி மூலமாகத்தான் கொரோனா வைரஸானது மனிதர்களின் செல்லில் நுழைகின்றன.

லாமாக்களில் உள்ள எதிர் உயிரிகள் வைரஸ்களில் உள்ள இந்த நீட்சிகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.இந்த ஆராய்ச்சி, செல் என்ற அறிவியல் இதழில் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த ஆராய்ச்சி நம்பிக்கையளித்தாலும், உடனடியாக இந்த சிகிச்சையை மனிதர்களுக்கு வழங்கிவிட முடியாது. முதலில் விலங்குகளிடம் சோதனை செய்து, பின்னர் மனிதர்களுடமும் இந்தச் சிகிச்சையை பரிசோதனை செய்ய வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Scientists ,University of Texas ,lama , Corona, Counter cells, Lama, Animal, More, Texas University, Scientists, Discovery
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு