திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட ஆரணி காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. காவலர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து காவல்நிலையத்தை மூடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொரோனா பாதித்த காவலர் நேற்று டாஸ்மாக் பாதுகாப்பு பணியில் இருந்தவர் என்பதால் மதுப்பிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.