×

பஞ்சம் நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறந்து விடப்பட்டுள்ளன: கமல்ஹாசன்

சென்னை: பஞ்சம் நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறந்து விடப்பட்டுள்ளன என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கொரோனாவிலிருந்து மக்கள் கவனம் திரும்பிவிடும் என்று அரசு நம்புவதாக கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒரு கிருமிக்கு உள்ள உயிர்வாழும் ஆசை கூட மக்களுக்கு இருக்காது என அரசு திண்ணமாக நம்புகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி கவிழும் தருவாயில் வசூல் வேட்டையில் இறங்கி இருக்கின்றனர். அரசு தனது அபத்தங்களை நிறுத்தாவிட்டால் சுனாமி கொண்டு சென்ற உயிர்களை விட மதுவால் அதிக பாதிப்பு இருக்கும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Tamil Nadu ,Liquor shops ,Kamal Haasan ,famine , Famine, Tamil Nadu, Liquor Stores, Kamal Haasan
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...