×

காமக்கொடூரன் காசி கூட்டாளி கைது

நாகர்கோவில்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இளம்பெண்களிடம் பழகி, உல்லாசமாக இருந்து அதை வீடியோ எடுத்ததுடன், அதை காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ள நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காமக் கொடூரன் காசியை (26) 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் 80க்கு மேற்பட்ட பெண்களின் ஆபாச காட்சிகள் இருந்தன. அந்த பெண்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடந்தது.  அந்த பெண்கள் சென்னை, கோவை, பெங்களூரை சேர்ந்தவர்கள் என கூறியுள்ளார்.

இதிலும் சென்னை, கோவையில் உள்ள பல குடும்ப பெண்களின் வீடியோக்கள் உள்ளன. அந்த பெண்கள் பற்றிய விபரத்தை காசி கூறி உள்ளார். இதை அவரது வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்துள்ளனர். தனக்கு உதவியதாக இரு நண்பர்கள் பற்றியும் அவர் கூறி உள்ளார்.  இந்நிலையில் காசியின் கூட்டாளியான கே.பி ரோடு அப்சர்வேட்டரி தெருவை சேர்ந்த ஜோசப் ஆன்டனி மகன் டைசன் ஜினோ (19) என்பவரை ராமநாதபுரத்தில் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

காசியின் போலீஸ் காவல் இன்று (7ம்தேதி) முடிகிறது. மாலை 3 மணிக்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். வழக்கு விசாரணைக்காக மேலும் சில நாட்கள் காசியை காவலில் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். விசாரணையின்போது போலீசாரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் என்னை  தூங்க விடுங்கள். எனக்கு தூக்கம் அதிகமாக வருகிறது என காசி கூறி உள்ளார்.

குடும்ப பெண்களின் ஆபாச வீடியோக்கள்
தனிப்படையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், லேப் டாப்பில் உள்ள வீடியோக்களை காட்டியதும் காசி முதலில் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் உள்ள பெண்கள் பற்றி அவராகவே கூறினார். என்னுடைய பேச்சில் மயங்கி, என்னை பிடித்ததால் நான் சொன்னபடி செய்தனர் என காசி கூறினார். பெண்களுக்கான பிட்னஸ் குறிப்புகளை காசி கூறுகிறார். இதை பெண்கள் ரசித்து கேட்கிறார்கள். இதில் திருமணமான பெண்களின் வீடியோக்கள் இருப்பது தான் பேரதிர்ச்சியாக உள்ளது. காசி கூறிய பெண்களின் பெயர் விவரங்கள், செல்போன் எண்கள், முகவரிகளை கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது என்றனர்.


Tags : partner ,Kamakoduran , Kamakoduran kasi ,partner arrested
× RELATED கொலை செய்து விடுவதாக மிரட்டி சிறுமியை...