×

டாஸ்மாக் திறப்பு அறிவிப்பு தெரியலையோ? தோப்பில் புதைத்து வைத்த சாராய ஊறல்கள் அழிப்பு: திருப்புத்தூர் அருகே 2 பேருக்கு வலை

திருப்புத்தூர்:  திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் பகுதியில் தென்னந்தோப்பில் கள்ளச்சாராயம் காய்ச்ச வைத்திருந்த ஊறலை போலீசார் அழித்தனர்.நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலால் கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் எம்.புதூர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக நேற்று முன்தினம் இரவு தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 திருக்கோஷ்டியூர் இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையிலான போலீசார் எம்.புதூர் பகுதியிலுள்ள தென்னந்தோப்பில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 30 லிட்டர் ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஊறல் போட்ட தோப்பின் உரிமையாளர் மணிகண்டன், காவலாளி கண்ணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.



Tags : task announcement ,grove ,Thiruputhur ,persons , announcement,Buried,Alcoholic ,Tirupputhur,
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!