×

மதுரை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொளுத்தப் போகும் வெயில் : வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் , நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில மதுரை, திருச்சி, திண்டுக்கல், கரூர், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்பதனால் அடுத்த இரு தினங்களுக்கு பதிவாகும் என்பதால் அடுத்துவரும் இருதினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11: 30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையை பொறுத்தவரை முற்பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பிற்பகலில் தௌிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சிவகோனம்,குளச்சல், சித்தார் மற்றும் நெல்லை மாவட்டம் செங்கோட்டை ஆகிய பகுதிகளில் 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : districts ,Trichy Madurai ,Trichy ,Madurai , Thermal convection, temperature, sun, meteorological center
× RELATED தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள்,...