மும்பை: மும்பையில் மதுக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகளை மூட மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தினால் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 3 ம் தேதி முதல் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருந்ததால் மதுக்கடைகள் மற்றும் பிற சில கடைகள் திறக்க மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகமானதால் தற்போது மதுக்கடைகள் மற்றும் அத்தியாவசியமற்ற கடைகளை மூட மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தொடர்ந்து செயல்படும் மும்பை மாநகராட்சி கூறியுள்ளது.