சென்னை: தமிழகத்தில் மேலும் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,058 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த 39 வயது திருநங்கைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 2 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 33-ஆக அதிகரித்துள்ளது.