×

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செட்டிபேடில் சோதனைச் சாவடி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாமுண்டீஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிப்பேடில் சோதனைச்சாவடி அமைக்கபப்படுகிறது.   அத்தியாவசியப் பொருள்கள் அல்லாமல் வரும் மற்ற வாகனங்கள், இ - பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள், சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்ல இ - பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படும். இதற்காக 1 டிஎஸ்பி தலைமையில் 50 போலீசார் மாவட்ட எல்லையில் தணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Checkpoint ,Sriperumbudur Next Chetpet , Sriperumbudur, Chettipadi, Checkpoint
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...