சென்னை: சென்னையில் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் அனைத்து தனிக்கடைகளும் செயல்பட அனுமதி. சென்னையில் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகளுக்கு அனுமதி. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை. தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதியில் ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.