சென்னை: சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா என்பதை மண்டல வாரியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக திரு.வி.க. நகர் மண்டலத்தில் 259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராயபுரத்தில் 216 பேர், தேனாம்பேட்டையில் 132 பேர், தண்டையார்பேட்டையில் 101 பேர், அண்ணா நகரில் 91 பேர் என மாநகரில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.