×

பிறந்தநாள் கேக் வெட்ட காதலன் வராததால் பெண் போலீஸ் தற்கொலை

பெரம்பூர்: விழுப்புரத்தை சேர்ந்தவர் சரண்யா (22). இவர், அயனாவரம் பனந்தோப்பு ரயில்வே காவலர் குடியிருப்பில் தங்கி, ரயில்வே போலீசில் காவலராக பணிபுரிந்து வந்தார். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக பாரிமுனை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் பணி செய்து வந்தார். இவரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரியும் ஏழுமலை என்பவரும் காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் ஏழுமலைக்கு பிறந்தநாள் என்பதால், அதை கொண்டாடுவதற்காக சரண்யா வேலை முடிந்து வரும்போது கேக் உள்ளிட்ட பரிசு பொருட்களை வாங்கி வந்துள்ளார். பின்னர், ஏழுமலைக்கு போன் செய்து கேக் வெட்ட அழைத்தபோது, “எனக்கு வேலை இருக்கிறது. பல்வேறு இடங்களுக்கு சாப்பாடு கொண்டு செல்லவேண்டும். இதனால் வீட்டுக்கு வர தாமதமாகும்” என கூறியுள்ளார்.

அதற்கு, ‘‘நீ மட்டும் வரவில்லை என்றால், நான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வேன்,’’ என சரண்யா கூறியுள்ளார். ஆனாலும், ஏழுமலை வரமறுத்து, இணைப்பை துண்டித்துள்ளார். பின்னர், பணி முடிந்ததும் ஏழுமலை இரவு 9 மணிக்கு சரண்யாவுக்கு போன் செய்துள்ளார். ஆனால் சரண்யா போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஏழுமலை, சரண்யாவின் பெண் தோழி ராஜேஸ்வரிக்கு போன் செய்து, உடனடியாக சரண்யா வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார்.

ராஜேஸ்வரி உடனடியாக சரண்யா வீட்டுக்கு சென்றபோது, அங்கு சரண்யா தனது துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி எஸ்ஐ சஜிபா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,suicide boyfriend , Birthday cake, boyfriend, girl cop, suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை