×

4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சிக்கினான்

பொன்னேரி: பொன்னேரி சாமுண்டீஸ்வரி நகரைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (24). இவர், கடந்த 2017ம் ஆண்டு வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல், வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய வழக்குகள் பொன்னேரி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. ஸ்டீபன், கடந்த 4 ஆண்டுகளாக போலீசாரிடம் பிடிபடாமல் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இதனையடுத்து, பொன்னேரி உதவி கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி மேற்பார்வையில், பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், எஸ்ஐ மகாலிங்கம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து போலீசார், ஸ்டீபனை வலைவீசி தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், தனிப்படை போலீசாருக்கு ஸ்டீபன் ஆந்திராவுக்கு தப்பிச் செல்ல இருப்பதாக தகவல் கிடைந்தது. இதனையடுத்து, தச்சூர் கூட்டு சாலையில் ஆந்திராவுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஸ்டீபனை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். தொடர்ந்து ஸ்டீபனை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Rowdy , Ponneri, celebrity rowdy, arrested
× RELATED 8 ஆண்டாக தலைமறைவாகி கொலை, கொள்ளைகளை...