×

பைக் திருடர்கள் சிக்கினர்

அண்ணாநகர்: திருமங்கலம் காந்தி மெயின் ரோடு, டி.வி.நகர் சேர்ந்தவர் பாலசுப்பரமணியன் (24). இவர் கடந்த 25ம் தேதி, வீட்டு அருகில் தன்னுடைய பைக்கை விட்டுச்சென்றார். மறுநாள் எழுந்து பார்த்தபோது அவரது பைக் திருடு போயிருந்தது. இதுகுறித்து பாலசுப்பரமணியன், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில்  வழக்கு பதிவு செய்த தேடினர். நேற்று திருமங்கலம், பாடி மேம்பாலம் கீழ், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வடபழனியை சேர்ந்த ரமேஷ் (25), குன்றத்தூரை சேர்ந்த விக்னேஷ் (18) என்பதும், இவர்கள் ஓட்டிவந்தது பாலசுப்பரமணியின் பைக் எனவும் தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Tags : Bike thieves , Bike thieves
× RELATED வாகன சோதனையில் போலீசுக்கு பயந்து...