×

சோழவந்தான் பகுதியை ‘டிரோன்’ மூலம் கண்காணிப்பு

சோழவந்தான்: சோழவந்தானில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களை போலீசார் பறக்கும்(டிரோன்) கேமரா மூலம் கண்காணித்து எச்சரித்து அனுப்பினர். மதுரை மாவட்டம், சோழவந்தான் நகர் பகுதியில் இன்ஸ்பெக்டர் (பொ) கிரேஸ் சோபியா பாய் தலைமையில் எஸ்.ஐக்கள் வாண்டையன், ரபீக் மற்றும் போலீசார் பறக்கும் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பேட்டை வைகையாற்றில் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

பறந்து வந்த கேமராவை பார்த்த அவர்கள் தலை தெறிக்க ஓடினர். மேலும் நகரின் பல்வேறு பகுதிகளிலும் இதே போல் கண்காணித்த போது சிலர் வெளியில் சுற்றித் திரிந்தனர். அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர்.

Tags : area ,Cholavandan , Cholavandan, drone, surveillance
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...