×

மும்பையில் அதிவேகமாக பரவும் கொரோனா: 3 காவலர்கள் உயிரிழந்த நிலையில் 55 வயதிற்கு மேல் உள்ள காவலர்கள் வீட்டில் இருக்க உத்தரவு

மும்பை: மும்பை காவல்துறையில் 3 காவலர்கள் உயிரிழந்த நிலையில் 55 வயதிற்கு மேல் காவலர்கள் வீட்டில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 52வயதிற்கு மேல் உள்ளவர்களில் சர்க்கரை நோய், உயர் ரத்தம் அழுத்தம் உள்ள காவலர்களும் வீட்டில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8590 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 369 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் முன்வரிசையில் நின்று களப்பணியாற்றும் காவல் துறையிலும் பலருக்கு கொரோனா பரவி உள்ளது.  

மகாராஷ்டிராவில் இதுவரை காவல்துறையைச் சேர்ந்த 107 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மும்பை காவல்துறையைச் சேர்ந்தவர்கள். மும்பையில் மட்டும் கடந்த 3 நாட்களில் 3 போலீஸ்காரர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனையடுத்து, மும்பை காவல்துறையில் பணியாற்றும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்பே நோய்த்தாக்கம் உள்ளவர்கள் விடுப்பில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறந்துபோன 3 போலீஸ்காரர்களும், மருத்துவமனையில் உள்ள போலீஸ்காரர்களும் 55 வயதைக் கடந்தவர்கள். இதனை கருத்தில் கொண்டு, 55 வயதுக்கு மேற்பட்ட போலீஸ்காரர்கள் மற்றும் அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் விடுப்பில் செல்லும்படி கூறப்பட்டுள்ளது.

Tags : Mumbai , Mumbai, Corona, Guards
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...