×

சுத்தியலால் அடித்து 3வது மனைவி படுகொலை: கணவன் தூக்குப்போட்டு தற்கொலை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி அண்ணா சாலையை சேர்ந்தவர் ஸ்டீவன்சன் (55). கூடுவாஞ்சேரி டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி உமா (38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில், செங்கல்பட்டில் உள்ள முதல் மனைவியை, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் ஸ்டீவன்சன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தார். 2வது மனைவி கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம் பஜனை கோயில் தெருவில் உள்ளார். உமா என்பவரை 3வது செய்து ெகாண்டார். 3 மனைவிகளையும் ஸ்டீவன்சன் காதல் திருமணம் செய்துள்ளார். உமா மறைமலைநகர் அடுத்த மல்ரோசாபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். ஸ்டீவன்சனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பிள்ளைகள் 2 பேரும், உமாவின் தாயுடன் பக்கத்து அறையில் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது, ஸ்டிவன்சனுக்கும், உமாவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ஸ்டீவன்சன், வீட்டில் இருந்த சுத்தியலால்  எடுத்து உமாவை தலையில் ஓங்கி அடித்தார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். பின்னர் ஸ்டீவன்சன், மனைவியின் புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை எழுந்து வந்து பார்த்த உமாவின் தாய், 2 சடங்களை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் வல்லாஞ்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Hammer ,suicide , Woman slaughters , hammer, Husband commits ,suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை