சென்னை: தமிழகத்தில் ஜி.பி.எப். வட்டி 7.9 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக குறைக்கப்படுவதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு (பிஎப்) மார்ச் மாதம் வரை 7.9 சதவீதம் வட்டி வழங்கி வந்தது. மத்திய அரசின் அறிவிப்பை பின்பற்றி, தமிழகத்திலும் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை வருங்கால வைப்பு நிதி வட்டியினை 7.9 விழுக்காட்டில் இருந்து 7.1 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது” என்று அந்த உத்தரவில் கூறியுள்ளார்.