சென்னை: தமிழ்நாடு யாதவ மகாசபை செயலாளர் சுப.சிவபெருமாள் சார்பில் அரசுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிப்பதாவது: கொரோனா பரவலால் ஆடுகள், மாடுகளை மேய்த்து வாழ்க்கை நடத்தி வந்த மூன்று லட்சம் குடும்பங்களின் வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்து விட்டது. ஒரு பைசா வருமானத்திற்கு வழியில்லை. ஆடுகள், மாடுகள் வைத்து பிழைப்போர் திக்கு, திசை தெரியாமல் ஒவ்வொரு நாளும் துன்பத்திலும், துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறார்கள். எனவே, ஆடுகள், மாடுகள் வைத்து மேய்த்து வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசர, அவசியமாக 7,500 கிடைத்து உதவ தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.