×

இதுதான் எங்கள் பாரம்பரியம்... தாம்பூலத்தில் வைத்து நிவாரண பொருட்கள் வழங்கிய இளைஞர்கள்: அரியலூர் அருகே நெகிழ்ச்சி

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே பொய்யூர் கிராமத்தில் உள்ள இருளர் சமூகத்தினருக்கு அப்பகுதி கிராம இளைஞர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினர். ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அப்பகுதி இளைஞர் குழுவினர் நிவாரணப் பொருட்களை அப்படியே வழங்காமல், பாரம்பரிய முறைப்படி, தாம்பூலத்தில் வெற்றிலைப் பாக்குடன், அரிசி, பருப்பு, எண்ணெய், மஞ்சள்தூள், மிளகாய்தூள், கடுகு உட்பட குடும்பத்துக்கு தேவையான காய்கறிகளையும் வைத்து வழங்கினர்.

இந்த நிகழ்வு நிவாரணப் பொருட்களை வாங்கிய மக்களுக்கு புதுமையான அனுபவத்தை தந்தது. இது குறித்து இளைஞர்கள் கூறுகையில், ‘‘தாம்பூலத்தில் வைத்து நிவாரணப் பொருட்களை கொடுப்பது, நம் முன்னோர்கள் செய்யும் மரியாதையை கடைபிடித்த மாண்பினை காக்கவே இப்படி ஒரு முயற்சியினை செய்து வருகிறோம்’’ என்றனர். இந்த சம்பவம் இருளர் சமூக மக்களிடம் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : Youths ,Ariyalur , Tradition., Tambulum, Relief Items
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்