சென்னை: கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் மனைவியின் கோரிக்கையை சென்னை மாநகராட்சி நிராகரித்துள்ளது. கொரோனா நோய் தொற்று பாதித்து மரணமடைந்த நபரின் உடல் பாதுகாப்பான முறைப்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் வெளியில் எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.