×

மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் பலி

டொரான்டோ: கனடாவின் வடக்கு பகுதியான நோவா ஸ்காட்டியா என்ற இடத்தில்,  மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார்.  போலீஸ் போல் உடையணிந்து அவர்கள் பயன்படுத்தும் வாகனம் போன்ற காரில் வந்து பலரது வீடுகளிலும் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். அதனபின் அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச்சென்றார்.

இந்த தாக்குதலில் 16 பேர் வரை பரிதாபமாக  உயிரிழந்தனர். இதில் 23 வயது பெண் கான்ஸ்டபிள்   ஒருவரும் பலியானார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். போர்ட்டாபிக் என்ற சிறிய ஊரில் வீடுகளில் வெளியேயும் உள்ளேயும் ஆங்காங்கே உடல்கள் சிதறிக் கிடந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கனடா போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபரை தேடினர். என்பீல்டு என்ற இடத்தில், பெட்ரோல் பங்க் ஒன்றில் வைத்து அந்நபரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இச்சம்ப வம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : Mystery shootout ,kills , 16 killed , mystery ,shootout
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி