பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே ஆந்திராவில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தனிப்படை உதவி ஆய்வாளர் குமார் மடக்கி விசாரித்தார். அப்போது அதில் வந்த ஒரு ஆசாமி தான் நிருபர் என கூறினார். சந்தேகத்தின்பேரில் அவரின் இருசக்கர வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அதில், சுமார் 40 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார், சானூர் மல்லாவரத்தை சேர்ந்த ஜோசப் (எ) ஜெய் (28) என்ற போலி நிருபரையும் வாலாஜா அடுத்த ஒழுகூரை சேர்ந்த குமரேசன் என்பவரையும் கைது செய்தனர்.