×

கோஷ்டி மோதலில் வாலிபருக்கு கத்திகுத்து: 7 பேர் கைது

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே நெய்வேலி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (19). அதே பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (27).  இருவருக்கும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மணிகண்டன் தரப்பிற்கும், இளங்கோவன் தரப்பிற்கும் நேற்று திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாகி  இரு கோஷ்டியினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.இதில், இளங்கோவன், மணிகண்டனை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.

இதனால் வலிதாங்காமல் மணிகண்டன் மயங்கி விழுந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த மணிகண்டனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு இருதரப்பு புகாரையும் பெற்றுக்கொண்டு இருதரப்பையும் சேர்ந்த இளங்கோவன் (27), முனுசாமி (50), சஞ்சய்குமார் (21), ராஜேந்திரன் (45), மணிகண்டன் (19), மகிமைதாஸ் (55), ஜெகன்நாதன் (45)  ஆகிய 7 பேரையும் கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரை தேடி வருகின்றனர்.



Tags : youth clash Youth clash ,persons , 7 persons,arrested, shouting , youth clash
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...