×

நாடே உயிர் காக்கப் போராடி வரும் இந்த நேரத்தில் வெளிப்படைத்தன்மை அரசு நிர்வாகத்தில் இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேஸ்புக்கில் கருத்து

சென்னை: நாடே உயிர் காக்கப் போராடி வரும் இந்த நேரத்தில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் கருவி தனது மாநிலத்துக்கு எத்தனை வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை சட்டீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

அதேபோல் தமிழக அரசும் எவ்வளவு கருவிகள், என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நாடே உயிர் காக்கப் போராடிவரும் இந்த நேரத்தில், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை வலியுறுத்துகிறேன்!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : government ,MK Stalin ,country ,struggle , Corona, MK Stalin, Facebook
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...