பாரமுல்லா: ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவின் சோபூரில் நடந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பாதுகாப்பு படைவீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். காயமடைந்த மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, அப்பகுதியில் பயங்கரவாதிகள் யாரும் பதுங்கியுள்ளரா என்பது குறித்து பாதுகாப்பு படை வீரர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.