சென்னை: கொரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனை கருவிகள் எவ்வளவு வந்துள்ளது என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நாடே உயிர்காக்க போராடி வரும் நிலையில் கருவிகள் வாங்கிய விலை, எண்ணிக்கை ஆகியவற்றில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படையாக அறிவிக்குமாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.