×

கலசபாக்கம் அருகே விஜயவாடா, ஈரோட்டில் இருந்து வந்த 9 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை

கலசபாக்கம்:  கலசபாக்கம் அருகே விஜயவாடா, ஈரோட்டில் இருந்து வந்த 9 நபர்களின் ரத்தமாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.கொரோனா நோய் தொற்றை தடக்க நடவடிக்கை மேற்கொள்வதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடு, வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை கலசபாக்கம் தாலுகாவில் வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு தலைமையில் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், கலசபாக்கம் அடுத்த மோட்டூர் ஊராட்சியில் விஜயவாடாவில் இருந்து வந்த 4 நபர்களின் ரத்தமாதிரியும், ஆதமங்கலம் புதூரில் ஈரோட்டில் இருந்து வந்த 5 பேரின் ரத்த மாதிரியும் மருத்துவக்குழுவினர் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக சந்தேகத்தின் பேரில் ரத்தமாதிரி அனுப்பப்பட்டுள்ளது.
கலசபாக்கம் அடுத்த பூண்டி, மோட்டூர், கலசபாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அரவிந்த் ஆய்வு செய்தார். இதில் பிடிஓக்கள் மரியதேவ்ஆனந்த், அன்பழகன், ஊராட்சி தலைவர் முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.



Tags : persons ,Blood sample test ,Kalasakkam ,Vijayawada ,Erode , Blood sample ,test,Vijayawada, Erode, ,Kalasakkam
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...