×

ஜெர்மனி, குவாலியரில் இருந்து ஆன்லைனில் தந்தையின் இறுதிச்சடங்கை பார்த்த மகன்கள்

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம் திருவனந்தபுரம்  அருகே உள்ள காட்டாக்கடை பகுதியை சேர்ந்தவர்  ரபேல் (89). இவரது மகன் கிரகோ. ஜெர்மனியில் உள்ள ஒரு  ஆலயத்தில்  பாதிரியாராக உள்ளார். இன்னொரு மகன் டெனிசியஸ். குவாலியரில் உள்ள சபையில்  பாதிரியாராக  உள்ளார்.  இந்தநிலையில் ரபேல் கடந்த 13ம் தேதி  மரணடைந்தார். தற்போது  ஊரடங்கு அமலில் இருப்பதால் மகன்கள் 2 பேரும் தந்தையை  பார்க்க வரமுடியாத  நிலை ஏற்பட்டது. நேற்று முன்தினம் ராபேலின் இறுதிச் சடங்கு  காட்டாக்கடையில்  நடந்தது. தந்தையின் இறுதிச் சடங்கில் நேரடியாக கலந்துகொள்ள  முடியாவிட்டாலும்  நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் என்று கிரகோயும்,  டெனிசியசும் விரும்பினர்.  இதையடுத்து அவர்களுக்கு ஆன்லைன் மூலம்  இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் அவர்கள் தாங்கள் இருந்த இடத்தில்  இருந்தே தந்தையின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளை ஆன்லைனில் பார்த்தனர்.




Tags : Sons ,funeral ,Germany ,Gwalior , Germany, Gwalior, online, father, funeral
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்...