×

தமுமுக - மமக சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு

தாம்பரம்: கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பலரும் வேலையின்றி வீட்டில் முடங்கி உள்ளனர். இந்நிலையில்  தமுமுக - மமக  தலைவர் ஜவாஹிருல்லா ஆணைக்கிணங்க மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் தாம்பரம் யாகூப் ஒருங்கிணைப்பில், ஊரடங்கு உத்தரவு பிறபித்த நாள் முதல் தாம்பரம் தொகுதிக்குட்பட்ட பெருங்களத்தூர், வண்டலூர், கிழக்கு தாம்பரம், மாடம்பாக்கம், மேற்கு தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய இடங்களில் ஏழை, எளிய மக்கள், ஆதரவற்றோர் மற்றும் தூய்மை பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், வட மாநில தொழிலாளர்களுக்கு தமுமுக - மமக தாம்பரம் பெருநகர பேரிடர் பணிக்குழு சார்பில் தினசரி மூன்று வேளை உணவு, தண்ணீர் பாட்டில், அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Tags : orphans ,UNP , Thamuka, Food, orphans, UNP
× RELATED மாட்டுத் தொழுவத்தில் குழந்தை பெற்றது...