சென்னை: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள், அரசியல்வாதிகள் உதவி செய்வதற்கு தடை விதித்தது குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். நோய் தொற்றை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் எச்சரிக்கையால் தான் நிவாரணம் வழங்க தடை விதிக்கப்பட்டது, தன்னார்வலர்கள் உதவிப் பொருட்களை அரசிடம் ஒப்படைத்தால் வருவாய்த்துறை மூலம் விநியோகிக்கப்படும் என்று தடைக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.