சென்னை: சென்னை கோடம்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் மீது கர்ப்பிணி பெண்கள் இருவர் புகார் அளித்துள்ளனர். மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணிகள் இருவரையும் போக்குவரத்து ஆய்வாளர் தடுத்து நிறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அடையாள அட்டை, ஆவணங்கள் காண்பித்த பிறகும் கர்ப்பிணிகள் சென்ற வாகனத்தை பறிமுதல் செய்ததாக புகார் தெரிவித்தனர்.