×

புழல் சிறையில் 697 பேர் விடுவிப்பு

சென்னை: புழல் மத்திய சிறையில் பெண்கள் பிரிவில் 150 பேரும், விசாரணை பிரிவில் 2500க்கும் மேற்பட்ட கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது புழல் சிறையில் கொரோனா வைரஸ் பரவுதல் மற்றும் கூட்ட நெரிசலை தடுக்கும் பொருட்டு, சிறுசிறு வழக்குகளில் கைதாகி உள்ளவர்களை ஜாமீனில் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது.  அதன்படி, கடந்த மார்ச் மாதம் முதல், விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 13வது கட்டமாக 53 பெண்கள் உள்பட மொத்தம் 697 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர் என சிறை துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Tags : prison ,Pullam , 697 freed ,Pullam,prison
× RELATED நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார்...