டெல்லி: ஸ்வீடன் நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வெனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இருநாட்டு தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும் கொரோனா தடுப்பு தொடர்பான ஆய்வு முடிவுகளை பகிர்ந்துகொள்ள இருநாட்டு தலைவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.