டெல்லி: நாடு முழுவதும் மாநிலங்களுக்கு இடையே பொருள் போக்குவரத்துக்கு தடையில்லை என உள்துறை இணைச் செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். பொருள் போக்குவரத்துக்கு சரக்கு ரயில்கள் இயங்கி வருவதாகவும் கூறினார். மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகளை தற்போது இந்தியாவிலேயே தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகளை இறக்குமதி செய்வது தொடரும் எனவும் கூறியுள்ளார்.