×

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.34.7 லட்சம்: எம்எல்ஏ இ.கருணாநிதி வழங்கினார்

செங்கல்பட்டு: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக  பல்லாவரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹34.7 லட்சத்தை எம்எல்ஏ இ.கருணாநிதி, கலெக்டர் ஜான்லூயிசிடம் வழங்கினார். பல்லாவரம் சட்டமன்ற தொகுதி  திமுக  எம்எல்ஏ இ. கருணாநிதி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹34.7.லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனோ வார்டு அமைக்க ₹13.7 லட்சம், பல்லாவரம், அனங்காபுத்தூர், பம்மல் ஆகிய நகராட்சிகள், திருநீர்மலை பேரூராட்சி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உபகரணங்கள் வாங்க ₹11.3 லட்சம்,  திருநீர்மலை பேரூராட்சி, பொழிச்சலூர் ஊராட்சி தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பு உபகரணங்களுக்கு ₹9.7லட்சம் என ₹34.7 லட்சத்துக்கான கடிதத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்  ஜான்லூயிசிடம்  நேற்று வழங்கினார்.

Tags : MLA K Karunanidhi , MLA K Karunanidhi,Rs 34.7 lakh , Coronation Prevention
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...